ஆறாயிரம் மாடுகளுக்கு மத்தியில் மை ஷூட்டிங்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆறாயிரம் மாடுகளுக்கு மத்தியில் மை ஷூட்டிங்

9/10/2011 11:32:00 AM

சென்னை, : பத்மாலயா சினி விஷன்ஸ் சார்பில் வி.வி.சூர்யநாராயண ராஜு தயாரிக்கும் படம், 'மை'. விஷ்ணுப்பிரியன், ஸ்வேதா பாசு, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் சே.ரா.கோபாலன், நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடியது ஓட்டு போடும்போது கைவிரலில் வைக்கப்படும் மை. படத்தின் ஹீரோ விஷ்ணுப்பிரியன், காதலி ஸ்வேதாவின் அட்வைஸ் படி அரசியலில் பெரிய பதவியை பிடிக்கிறார். 

பிறகு அவர் பகுதியை எப்படி மாற்றுகிறார் என்பது கதை. வேலூரை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. பொய்கையில் வாரந்தோறும் நடக்கும் பிரமாண்டமான மாட்டுச்சந்தையில், ஆறாயிரம் மாடுகளுக்கு மத்தியில் விஷ்ணுப்பிரியன் நடித்த முக்கிய காட்சிகளை படமாக்கினோம். இது பரபரப்பான காட்சியாக இருக்கும். வேலூர் கோட்டையில் சிறப்பு அனுமதி வாங்கி ஷூட்டிங் நடத்தினோம். சாமியார்கள் தேவைப்பட்ட காட்சிக்காக, ஆற்காடு அருகே வள்ளிமலைக்கு சென்று, முருகன் கோயிலில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சாமியார்களை வேலூருக்கு வரவழைத்து படமாக்கியுள்ளோம். இவ்வாறு கோபாலன் கூறினார்.



 

Post a Comment