கரணின் தந்தையிடம் செயின் பறிப்பு
9/22/2011 11:38:46 AM
பிரபல நடிகர் கரணின் தந்தை கேசவன். இவரும் சில படங்களில் நடித்து உள்ளார். சென்னை கோயம்பேடு வடக்குமாட வீதியில் தனியாக வசித்து வந்த இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டு வெளியில் நின்ற மர்ம நபர் ஒருவன், கேசவனை தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். பின்னர் கத்திமுனையில் கேசவனை மிரட்டி, அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த நபர் தப்பி ஓடிவிட்டான். இந்த சம்பவம் தொடர்பாக கேசவன் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு போலீசில் புகார் கொடுத்தார்.
Post a Comment