பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனோத். பாரிஸ் ஹில்டன் நடத்தும் ஆபரண வியாபாரத்திற்கு உலகம் முழுவதும் விளம்பரம் செய்து வருகிறார். இந்தியா மீதும் அவர் கண் உள்ளது. அதற்காக பாரிஸ் தன்னை அணுகியதாக கங்கனா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான பிராண்ட் அம்பாஸடர் நான் தான் என்றார் கங்கனா. ஆனால் பாரிஸ் தரப்பு இதை மறுத்துள்ளது.
இது குறித்து பாரிஸின் நகைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் பிரக்யா நரங் கூறியதாவது,
கங்கனா ரனோத்தை அணுகவேயில்லை என்று பாரிஸ் ஹில்டன் தெரிவித்துள்ளார். அவரது பேஷன் லைனுக்கு பாரிஸ் தான் அம்பாஸடராக இருக்கப் போகிறார். உலக அளவில் பாரி்ஸ் ஹில்டனே ஒரு மெகா ஸ்டார். அப்படி இருக்க அவது பேஷன் லைனுக்கு வேறு யாரையாவது ஏன் தேட வேண்டும். உலகின் எந்த பகுதியிலும் அவரது பேஷன் பொருட்களுக்கு வேறு எந்த ஒருவரின் முகமும் தேவையில்லை என்றார்.
Post a Comment