சென்னை: பேச்சுவார்த்தை முடிவடையும் வரை, பெப்சி தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டாம், என திரைப்பட தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரு அமைப்புகளை சேர்ந்தவர்களின் கூட்டு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தின் முடிவில், வெளியிடப்பட்ட அறிக்கை:
"திரைப்பட தயாரிப்பாளர்களின் அமைப்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தோடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி, ஊழியர்களுக்கான ஊதிய விகிதத்தை முடிவு செய்வது வழக்கம்.
அந்த வழக்கத்தையொட்டி கடந்த இரண்டு மாதங்களாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
4 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்து 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை சம்பள உயர்வு தருவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், சில தொழிற்சங்க பிரிவினர் 50 முதல் 75 சதவீதம் வரை சம்பள உயர்வு வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
இன்று திரையுலகம் நலிந்த சூழ்நிலையில் உள்ளது. 50 முதல் 75 சதவீத ஊதிய உயர்வை எந்த தயாரிப்பாளரும் தர முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். பெரிய பட தயாரிப்பாளர்களின் நிலையே இதுவென்றால், சிறு பட தயாரிப்பாளர்களால் இந்த சுமையை எப்படி தாங்க முடியும்?
கர்நாடகாவில் 20 முதல் 30 சதவீத சம்பள உயர்வு என்று முடிவெடுக்கப்பட்டு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் அதற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டுள்ளனர் என்பதையும் எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்று பல தமிழ் படப்பிடிப்புகள், தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டதன் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்து பேசுவதற்காக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள பட தயாரிப்பாளர்களின் கூட்டம் வருகிற செப்டம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் கூட்டப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளுக்குப்பின், பேச்சுவார்த்தை நடைபெற்று ஒரு முடிவு வரும்வரை, தொழிலாளர்கள் இப்போதுள்ள சம்பள விகிதத்தை ஒப்புக்கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்.
நிலைமை எல்லை மீறினால் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காணும்படி, தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்.''
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற கூட்டு கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், துணைத்தலைவர் அன்பாலயா கே.பிரபாகரன், செயலாளர் கே.முரளிதரன், பொறுப்பு செயலாளர் கதிரேசன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கேயார், இப்போதைய துணைத்தலைவர் டி.சிவா, செயலாளர்கள் எல்.சுரேஷ், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் மற்றும் தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரு அமைப்புகளை சேர்ந்தவர்களின் கூட்டு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தின் முடிவில், வெளியிடப்பட்ட அறிக்கை:
"திரைப்பட தயாரிப்பாளர்களின் அமைப்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தோடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி, ஊழியர்களுக்கான ஊதிய விகிதத்தை முடிவு செய்வது வழக்கம்.
அந்த வழக்கத்தையொட்டி கடந்த இரண்டு மாதங்களாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
4 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்து 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை சம்பள உயர்வு தருவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், சில தொழிற்சங்க பிரிவினர் 50 முதல் 75 சதவீதம் வரை சம்பள உயர்வு வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
இன்று திரையுலகம் நலிந்த சூழ்நிலையில் உள்ளது. 50 முதல் 75 சதவீத ஊதிய உயர்வை எந்த தயாரிப்பாளரும் தர முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். பெரிய பட தயாரிப்பாளர்களின் நிலையே இதுவென்றால், சிறு பட தயாரிப்பாளர்களால் இந்த சுமையை எப்படி தாங்க முடியும்?
கர்நாடகாவில் 20 முதல் 30 சதவீத சம்பள உயர்வு என்று முடிவெடுக்கப்பட்டு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் அதற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டுள்ளனர் என்பதையும் எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்று பல தமிழ் படப்பிடிப்புகள், தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டதன் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்து பேசுவதற்காக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள பட தயாரிப்பாளர்களின் கூட்டம் வருகிற செப்டம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் கூட்டப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளுக்குப்பின், பேச்சுவார்த்தை நடைபெற்று ஒரு முடிவு வரும்வரை, தொழிலாளர்கள் இப்போதுள்ள சம்பள விகிதத்தை ஒப்புக்கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்.
நிலைமை எல்லை மீறினால் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காணும்படி, தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்.''
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற கூட்டு கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், துணைத்தலைவர் அன்பாலயா கே.பிரபாகரன், செயலாளர் கே.முரளிதரன், பொறுப்பு செயலாளர் கதிரேசன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கேயார், இப்போதைய துணைத்தலைவர் டி.சிவா, செயலாளர்கள் எல்.சுரேஷ், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் மற்றும் தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.
Post a Comment