9/12/2011 9:57:05 AM
கதையின் நாயகனாக நடிக்க உள்ள படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த விவேக் கூறியதாவது: அப்துல் கலாம் ஆலோசனைப்படி, 'பசுமை கலாம்' என்ற திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதை பொதுநல நோக்கோடு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்து வருகிறேன். நம் எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழவும், மழை பொய்த்துப் போகாமல் இருக்கவும், சுற்றுச்சூழல் தூய்மையாக அமையவும் ஏதுவாக மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. நடுவதுடன் நின்றுவிடாமல், அவை சரியாக பரமாரிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய, பறக்கும் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 'பசுமை கலாம்' திட்டத்தில் என் பணியை பாராட்டிய ஒரு அமைப்பு, 'பசுமை நாயகன்' என்ற பட்டத்தை அளிக்க முன்வந்தது. அவர்களிடம், 'மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டமும், மக்கள் கொடுத்த 'ஜனங்களின் கலைஞன்' என்ற பட்டமும் போதும்' என்று அன்புடன் மறுத்து விட்டேன். பட்டம் கொடுப்பதற்கு பதிலாக, பத்து மரக்கன்றுகள் கொடுத்து உதவுங்கள் என்று சொல்லி இருக்கிறேன்.
Post a Comment