அ‌‌ஜீத் படத்துக்கு வந்த திடீர் குழப்பம்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அ‌‌ஜீத் படத்துக்கு வந்த திடீர் குழப்பம்!

9/27/2011 12:10:29 PM

மாங்காத்தா வெற்றி பிறகு தல அஜீத் தற்போது பில்லா 2-வில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு ஸ்ரீ சூர்யா மூவிஸ் ஏ,எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தில் அஜீத் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து படத்தை இயக்க போவது ஜெயம் ராஜா என்றும், தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த தூக்குடு படத்தை ரீமேக் செய்யப் போகிறார்கள் என்றும் ஒரு தரப்பு தெரிவித்தது. அதே சமயம், நண்பன் படத்தை முடித்த கையோடு, ஏற்கெனவே ஏஎம் ரத்னத்துக்கு ஒரு படம் செய்து தருவதாகக் ஷங்கர் கூறியிருந்தாகவும் அப்படி நிறைவேறினால் ஷங்கர் இயக்கத்தில் அஜீத் நடிப்பது கிட்டதட்ட உறுதியாகிவிடும் என இன்னொரு தரப்பு தெரிவித்து வருகிறது. இந்த குழப்பமான நிலை நிலவி வந்த நிலையில், ஜெயம் ரவி தன்னுடைய அண்ணன்(ஜெயம் ராஜா) இயக்கத்தில் அஜீத் நடிக்கிறார் என்ற செய்தி பொய்யானது என்று தனது ட்விட்ட‌ரில் தெ‌ரிவித்துள்ளார். இயக்குனர் யார் என்பதை அ‌‌ஜீத்தோ, ரத்னமோ இன்னும் முடிவு செய்யவில்லை, இதுவே உண்மை என்கிறார்கள்.




 

Post a Comment