9/12/2011 10:03:44 AM
திருமணத்துக்கு பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார் மதுமிதா. இது குறித்து அவர் கூறியதாவது: தமிழில் 'யோகிÕக்கு பிறகு நல்ல வாய்ப்புகள் அமையாதது என் துரதிருஷ்டம். வந்த சில வாய்ப்புகள் திருப்தி அளிக்கவில்லை. திருமணம், தேனிலவு என்று சில காலம் ஓடிவிட்டது. சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் தெலுங்கில் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன். மனோஜ் ஹீரோ. தீட்சிதாவும் நானும் ஹீரோயினாக நடிக்கிறோம். நல்ல குடும்ப பெண் கேரக்டர். தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதிப்பதில்லை. நல்ல கேரக்டராக இருந்தால் போதும். ஆனால் கிளாமராக மட்டும் நடிக்க மாட்டேன். திருமணமாகிவிட்டதால் சொல்லவில்லை. எப்போதுமே அப்படி நடித்ததில்லை.
Post a Comment