இயக்குநர் சற்குணம் திருமணம்... எம்பிஏ பட்டதாரியை மணக்கிறார்!

|


களவாணி படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சற்குணம் - சரண்யா திருமணம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடக்கிறது.

சற்குணத்தின் உறவுக்காரப் பெண்தான் மணமகள் சரண்யா. பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் இது. மணப்பெண் சரண்யா எம்பிஏ பட்டதாரி.

சற்குணத்தின் அடுத்த படம் வாகை சூடவா வரும் 23-ம் தேதி வெளியாகிறது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன் திருமணம் நடக்கிறது.

சொந்த ஊரான ஒரத்தநாடு தேத்தாடிக் கொல்லை, ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தில் திருமணத்தை வைத்துள்ளார் சற்குணம். செப்டம்பர் 15-ம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 -11 மணிக்குள் முகூர்த்தம் நடக்கிறது.

சென்னையில் தனியாக திருமண வரவேற்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Post a Comment