நான் பிறந்து வளர்ந்த நியூயார்க் தான் என் கணவன் என்று பிரபல பாப் பாடகி லேடி காகா தெரிவித்துள்ளார். உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை தனது பள்ளிக்கூடத்தின் மொட்டை மாடியில் இருந்து பார்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
9/11 தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி பிரபலங்கள் தங்கள் அனுபவத்தை தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு பிரபல பாப் பாடகியான லேடி காகாவும் தன்னால் மறக்க முடியாத சம்பவத்தைப் பற்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து காகா கூறியதாவது,
உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை நான் என் பள்ளிக்கூட மாடியில் இருந்து பார்த்தேன். அந்த பயங்கரக் காட்சியை எனது நண்பர்களின் கையை இருக்கிப் பிடித்துக் கொண்டு பார்த்தேன்.
நான் பிறந்து வளர்ந்த நியூயார்க் நகரம் தான் என் கணவன். நான் மணம் முடிக்காத கணவன். மேரி தி நைட் என்பது என் கணவன் நியூயார்க் பற்றி பாடப்பட்டது என்றார்.
லேடி காகாவின் பல ஆல்பம்களில் நியூயார்க் பற்றி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment