அனுஷ்காவுடன் எனக்கு தகராறு எதுவும் இல்லை. ஆனாலும் என்படத்தில் அவர் இல்லை என்கிறார் ராகவா லாரன்ஸ்.
காஞ்சனா படத்துக்குப் பிறகு இயக்குநராகவும் ஹீரோவாகவும் லாரன்ஸின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. இன்று தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தியிலும் அவருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் அவர் தெலுங்கில் இயக்கும் அடுத்த படமான 'ரிபெல்'லில் நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சில தினங்களில் அவருக்கு பதில் தமன்னா ஒப்பந்தமானதாக செய்தி வெளியானது.
ஏற்கெனவே காஞ்சனா படத்தில் அனுஷ்கா நடிக்கவிருந்து, பின்னர் திடீரென லட்சுமி ராய் நடித்தார். இப்போது ரிபெல் படத்திலும் இதே நிலை என்பதால், லாரன்ஸுக்கும் அனுஷ்காவுக்கும் தகராறு என பேச்சு பரவியது.
இதுகுறித்து லாரன்சிடம் கேட்டபோது, "அனுஷ்காவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் சண்டை போடவும் இல்லை.
ரிபெல் படத்தில் அனுஷ்கா நடிக்க முடியாமல் போனது எதிர்பாராமல் நடந்தது. அதேபோல இந்தப் படத்தில் தமன்னா நடிப்பதாக வந்த செய்தியிலும் உண்மையில்லை. இன்னும் நான் யாரையும் நாயகியாக முடிவு செய்யவில்லை," என்றார்.
காஞ்சனா படத்துக்குப் பிறகு இயக்குநராகவும் ஹீரோவாகவும் லாரன்ஸின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. இன்று தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தியிலும் அவருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் அவர் தெலுங்கில் இயக்கும் அடுத்த படமான 'ரிபெல்'லில் நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சில தினங்களில் அவருக்கு பதில் தமன்னா ஒப்பந்தமானதாக செய்தி வெளியானது.
ஏற்கெனவே காஞ்சனா படத்தில் அனுஷ்கா நடிக்கவிருந்து, பின்னர் திடீரென லட்சுமி ராய் நடித்தார். இப்போது ரிபெல் படத்திலும் இதே நிலை என்பதால், லாரன்ஸுக்கும் அனுஷ்காவுக்கும் தகராறு என பேச்சு பரவியது.
இதுகுறித்து லாரன்சிடம் கேட்டபோது, "அனுஷ்காவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் சண்டை போடவும் இல்லை.
ரிபெல் படத்தில் அனுஷ்கா நடிக்க முடியாமல் போனது எதிர்பாராமல் நடந்தது. அதேபோல இந்தப் படத்தில் தமன்னா நடிப்பதாக வந்த செய்தியிலும் உண்மையில்லை. இன்னும் நான் யாரையும் நாயகியாக முடிவு செய்யவில்லை," என்றார்.
Post a Comment