முதல் இடம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான கவிதா நாயர் சரோஜாதேவி மாதிரி இருப்பதாக பலரும் சொல்கிறார்களாம். தனது பெயரில் உள்ள நாயரை நீக்கியுள்ளார் அவர்.
முதல் இடம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு கிடைத்த கதாநாயகி கவிதா நாயர். மும்பையில் வசித்த அவர் தற்போது சென்னையில் குடியேறியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளப் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வருகிறதாம். அதனால் தான் இடமாற்றம்.
இது குறித்து கவிதா நாயர் சாரி கவிதா கூறியதாவது,
என்னைப் பார்ப்பவர்கள் நான் சரோஜா தேவி மாதிரி இருப்பதாக புகழ்கிறார்கள். அது எனக்கு பெருமையாக உள்ளது. எனது பெயரில் உள்ள நாயரை நீக்கவிட்டேன். அதனால் இனி அனைவரும் என்னை கவிதா என்று தான் அழைக்க வேண்டும் என்றார்.
Post a Comment