ஷாரூக்கானின் ரா ஒன் படத்தில் ஒரு காட்சியில் மட்டும் தோன்றுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தக் காட்சியில் அவர் நடிப்பாரா இல்லையா என பலத்த சந்தேகம் நீடித்தது.
ஆனால் கடைசியில், அந்த சந்தேகத்தையெல்லாம் தூளாக்கிவிட்டு, மும்பையில் மூன்று மணிநேரம் இந்தப் படத்துக்காக நடித்துக் கொடுத்துள்ளார் ரஜினி.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் ரஜினி நடிக்க கூடாது என்றே அவரது குடும்பத்தினர் கூறிவந்தனர். ஆனால் ஷாரூக்கானே ரஜினியிடம் போனில் இதுகுறித்துக் கேட்டுள்ளார்.
டாக்டர்கள் இன்நும் ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறார்களே என ரஜினி நாசூக்காக அப்போது சொன்னாராம். ஆனால் சில தினங்கள் கழித்து ரஜினி மகள் சௌந்தர்யாவே ஷாரூக்கானைத் தொடர்பு கொண்டு, அந்தக் காட்சி எப்படி வர வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே ஷாரூக்கும் அதுகுறித்த வீடியோவை அனுப்ப, இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் சிட்டியில் அக்டோபர் 4-ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தார்களாம்.
ஆனால் கடைசி நேரத்தில் ரஜினியின் விருப்பப்படி மகாத்மாவின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதியே மும்பையில் உள்ள இயக்குநர் சுபாஷ் கய்யின் பிலிம் இன்ஸ்டிட்யூட் நிறுவன வளாகத்தில் உள்ள ஸ்டுடியோவில் வைத்து இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
இந்தக் காட்சியை எடுத்து முடிக்க சரியாக மூன்று மணி நேரம் பிடித்துள்ளது. இந்த மூன்று மணி நேரமும் ரஜினி மிக இயல்பாக, தனக்கே உரிய ஸ்டைலில் நடித்துக் கொடுத்துள்ளார்.
இந்த தகவலை நேற்று மாலை ஷாரூக்கான் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ரஜினியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ரா ஒன்னை தீபாவளி திரை விருந்தாகவே அவர்கள் கருத ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் கடைசியில், அந்த சந்தேகத்தையெல்லாம் தூளாக்கிவிட்டு, மும்பையில் மூன்று மணிநேரம் இந்தப் படத்துக்காக நடித்துக் கொடுத்துள்ளார் ரஜினி.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் ரஜினி நடிக்க கூடாது என்றே அவரது குடும்பத்தினர் கூறிவந்தனர். ஆனால் ஷாரூக்கானே ரஜினியிடம் போனில் இதுகுறித்துக் கேட்டுள்ளார்.
டாக்டர்கள் இன்நும் ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறார்களே என ரஜினி நாசூக்காக அப்போது சொன்னாராம். ஆனால் சில தினங்கள் கழித்து ரஜினி மகள் சௌந்தர்யாவே ஷாரூக்கானைத் தொடர்பு கொண்டு, அந்தக் காட்சி எப்படி வர வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே ஷாரூக்கும் அதுகுறித்த வீடியோவை அனுப்ப, இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் சிட்டியில் அக்டோபர் 4-ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தார்களாம்.
ஆனால் கடைசி நேரத்தில் ரஜினியின் விருப்பப்படி மகாத்மாவின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதியே மும்பையில் உள்ள இயக்குநர் சுபாஷ் கய்யின் பிலிம் இன்ஸ்டிட்யூட் நிறுவன வளாகத்தில் உள்ள ஸ்டுடியோவில் வைத்து இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
இந்தக் காட்சியை எடுத்து முடிக்க சரியாக மூன்று மணி நேரம் பிடித்துள்ளது. இந்த மூன்று மணி நேரமும் ரஜினி மிக இயல்பாக, தனக்கே உரிய ஸ்டைலில் நடித்துக் கொடுத்துள்ளார்.
இந்த தகவலை நேற்று மாலை ஷாரூக்கான் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ரஜினியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ரா ஒன்னை தீபாவளி திரை விருந்தாகவே அவர்கள் கருத ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment