இரண்டாவது இன்னிங்ஸிலும் அசத்துவேன் - சோனியா அகர்வால்

|


அழகு, நடிப்பு என ஒரு நல்ல நடிகைக்குரிய அனைத்து லட்சணங்களுடன் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் சோனியா அகர்வால்.

செல்வராகவனுடன் திருமணம், விவாகரத்து என அவரது வாழ்க்கை இடையில் சில ஆண்டுகள் கழிந்தது.

இப்போது விவாகரத்துக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள அவருக்கு நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. பொதுவாக கல்யாணமான நடிகைகளை வயது வித்தியாசமின்றி அக்கா அம்மா வேடங்களுக்குத் துரத்திவிடும் தமிழ் சினிமா, சோனியாவுக்கு மட்டும் மீண்டும் ஹீரோயின் அந்தஸ்தைக் கொடுத்துள்ளது.

ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தி்ல கதையின் நாயகியாக நடிக்கும் சோனியா, அடுத்து தீர்வு எனும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். அதேநேரம் இன்னொரு ஹீரோயின் நடிக்கும் படங்கள் என்றாலும் இன்னொரு நாயகியாக நடிக்க தயங்குவதில்லை அவர்.

இதனால் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வரத் தொடங்கியுள்ளதாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் எதிர்பார்க்காத வரவேற்பு இப்போது கிடைத்துள்ளது. இதை தக்கவைத்துக் கொள்வேன். முதல் நாயகியா இரண்டாவது நாயகியா என்று பார்க்கும் நிலையில் நான் இல்லை. என் பாத்திரம் பேசப்படுமானால் எந்த வேடமும் ஓகே. இரண்டாவது இன்னிங்ஸிலும் மக்களின் விருப்பத்துக்குரிய நடிகையாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை," என்றார்.
 

Post a Comment