சாயா சிங்கின் 'மகா நட்புக் கோட்டை'!

|


நடிகை சாயா சிங்கிற்கு பள்ளித் தோழிகள், கல்லூரித் தோழிகள் தவிர செல்போன் தோழி ஒருவரும் இருக்கிறார்.

திருடா திருடி படம் மூலம் பிரபலமானவர் சாயா சிங். அவர் ஆடிய மன்மத ராசா பாடலை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. காதல் கோட்டை படத்தில் அஜீத்தும், தேவயானியும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதலிப்பார்கள். இது நமக்கெல்லாம் தெரிந்த கதை.

அதே ஸ்டைலில் சாயாவும் ஒருவரை பார்க்காமலேயே அவருடன் நட்பாக உள்ளார் என்று உங்களுக்குத் தெரியுமா. திருடா திருடியில் சாயாவுக்கு குரல் கொடுத்தவர் மகா. அவர் குரல் மிகவும் பிடித்துப் போக சாயா அவரது செல்போன் நம்பரை கண்டுபிடித்து அழைத்து பேசியுள்ளார். இருவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர்.

இருவரும் தினமும் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள் என்றால் பாருங்களேன். இதில் விந்தை என்னவென்றால் சாயாவும், மகாவும் இதுவரை ஒருவரையொருவர் பார்த்ததேயில்லை. மகாவுக்கு சாயாவைத் தெரியும். ஆனால் மகாவே நேரில் வந்து நின்றாலும் அவரை சாயாவால் கண்டுபிடிக்க முடியாது.

நாம் ஏன் சந்திக்கக் கூடாது என்று சாயா கேட்டதற்கு பார்க்காமலேயே காதலிக்கும்போது நட்பை வளர்க்க முடியாதா என்று மகா கேட்டுள்ளார். டீலிங் பிடித்துப் போக சாயாவும் அதையே தொடர்கிறார்.

இந்த சாயா நட்பு நீடிக்கட்டும்...!
 

Post a Comment