ரஜினியைச் சந்தித்தேன்... நலமாக, உற்சாக இருக்கிறார்! - ஷாரூக்கான் பேட்டி

|


சென்னை: ரஜினி மிகவும் நலமாகவும் உற்சாகத்துடனும் உள்ளதாக, அவரைச் சந்தித்த பிறகு நடிகர் ஷாரூக்கான் தெரிவித்தார்.

திங்கள்கிழமை சென்னையில் ரா ஒன் படத்தின் தமிழ் பதிப்புக்கான இசைத் தட்டு வெளியீட்டு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் ஷாரூக்கான். இந்த சந்திப்பு 30 - 35 நிமிடங்கள் நீடித்தது.

இந்த சந்திப்பு குறித்து ஷாரூக்கான் அளித்த பேட்டி:

ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து நன்றி கூறினேன். இருவரும் அரைமணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தோம். முதலில் சுவையான இளநீர் தந்தார்கள். பின்னர் ரஜினியுடன் காபி சாப்பிட்டேன்.

அவருடன் இருந்த நேரத்தில் ரஜினிசார் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டார். 'ரா ஒன்' பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்தினார்.

சிலர் என்னை அவருடன் ஒப்பிட்டு எழுதுகிறார்கள். தயவு செய்து என்னை 'கிரேட் ரஜினி சாரு'டன் ஒப்பிட வேண்டாம். இந்தப் படத்தில் அவரும் நடிப்பதன் மூலம் அவரது ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும் என விரும்பினேன். இங்கு சென்னை வந்தபிறகு, அவரும் அவரது மனைவி திருமதி லதாவும் எனக்கு டின்னர் அனுப்பி வைத்தனர். அந்த அளவு அன்பான அக்கறையான மனிதர்கள் அவர்கள். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கவே நேரில் போய் சந்தித்தேன்.

அவரை இத்தனை வலிமையாகவும் உற்சாகமாகவும் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. ராணா விரைவில் தொடங்கிவிடும் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். இந்த அருமையான சந்தர்ப்பத்தையும், அவரது ஆசியையும் ரா ஒன் டீமுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். விரைவில் ரா ஒன்னில் ரஜினி நடித்துள்ள காட்சி அடங்கிய புதிய ட்ரெயிலர் வெளியாகும்," என்றார்.

பிரபல கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் மறைவுக்கு ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததாகவும் ஷாரூக்கான் தெரிவித்தார்.
 

Post a Comment