பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இன்று தேவர் குருபூஜையையொட்டி தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த நடிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் 104வது ஜெயந்தி தினம் மற்றும் குருபூஜை இன்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவரின் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் கட்சியினர், தேவர் இன அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என பெரும் திரளானோர் காலை முதலே திரண்டு வந்து, நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள் சிங்கமுத்து, கருணாஸ் உள்ளிட்ட திரையுலகினரும் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு வந்து தேவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
Post a Comment