சிங்களப் படத்தில் நடிகை பூஜா!

|


நடிகை பூஜா மீண்டும் நடிப்புக்குத் திரும்புகிறார். இப்போது ஒரு சிங்களப் படத்தில் நடிக்கும் அவர், மீண்டும் தமிழில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

நான் கடவுள் படம் வெளியாகி, பூஜாவுக்கு ஓகோவென பெயர் வாங்கித் தந்தது. ஆனால் அதன் பிறகு எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. பெங்களூரில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் என்றார்கள்.

இல்லையில்லை, அப்பா அம்மா பேச்சைக் கேட்டு, ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்கள்.

இன்னும் சிலர் அந்த கம்பெனி ஓனர்தான் பூஜாவின் மாப்பிள்ளை என்றார்கள். ஆனால் எந்த கிசுகிசுவுக்கும் பூஜா பதில் தரவில்லை.

இப்போது சிங்களத்தில் தயாரிக்கும் புத்தரின் இளமைக்கால வரலாறு பற்றிய படத்தில் நடிக்கிறாராம் பூஜா.

இந்தப் படம் முடிந்ததும் தமிழிலும் நடிப்பார் என்கிறா்கள்.
 

Post a Comment