குன்னூர்: குன்னூரில் குடிப்போதையில் சுற்றித் திரிந்த சினிமா தயாரிப்பாளர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூரை அடுத்த கொடலட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேலன்(38). அவரது மனைவியை விட்டு பிரிந்து கடந்த 1 ஆண்டாக தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. படுகர் இனத்தை சேர்ந்த வெற்றிவேலன், பார்த்திபன், சாமி உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
சமீபகாலமாக 'ஹெச முங்காரு' என்ற படுகர் மொழி சினிமாவை வெற்றிவேலன் தயாரித்து வந்தார். மனைவி இறந்த பின் எப்போது போதையில் சுற்றி திரிந்த வெற்றிவேலன், இன்று காலை தூதுர்மட்டம் பகுதியில் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் அவர் இறந்து 3 நாட்களாகியதாக தெரிவித்தனர்.
வெற்றிவேலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெற்றிவேலன் தானாக இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூரை அடுத்த கொடலட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேலன்(38). அவரது மனைவியை விட்டு பிரிந்து கடந்த 1 ஆண்டாக தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. படுகர் இனத்தை சேர்ந்த வெற்றிவேலன், பார்த்திபன், சாமி உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
சமீபகாலமாக 'ஹெச முங்காரு' என்ற படுகர் மொழி சினிமாவை வெற்றிவேலன் தயாரித்து வந்தார். மனைவி இறந்த பின் எப்போது போதையில் சுற்றி திரிந்த வெற்றிவேலன், இன்று காலை தூதுர்மட்டம் பகுதியில் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் அவர் இறந்து 3 நாட்களாகியதாக தெரிவித்தனர்.
வெற்றிவேலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெற்றிவேலன் தானாக இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Post a Comment