கவர்ச்சி இல்லாமலும் ஜெயிக்கலாம் என்று நடிகை பாமா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இந்திப் படத்தில் நடித்து வெற்றி பெற்றால் இந்திய நடிகை, தமிழ் படத்தில் ஜெயித்தால் தென்னிந்திய நடிகை, இதுதான் இன்றைய நிலை. அதற்காகத்தான் மலையாள நடிகைகள் தாய் மொழிக்குப் பிறகு தமிழில் ஜெயிக்க நினைக்கிறார்கள்.சிலர் தமிழில் ஜெயிக்க கிளாமர் முக்கியம் என்று நினைக்கிறார்கள். ரேவதி எந்தப் படத்திலும் கிளாமராக நடிக்காமல் வெற்றி பெற்றார். சமீபத்தில் ப்ரியாமணியும், அமலா பாலும் கிளாமராக நடிக்காமல் தமிழில் ஜெயித்தார்கள். எனவே வெற்றிபெறுவதற்கு கிளாமர் முக்கியமில்லை. தற்போது தமிழில் 'சேவற்கொடி' படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். கன்னட 'மைனா' படமும், 'ஒண்டு கவுனவல்லி' என்ற படமும் அடுத்த மாதம் வெளிவருகிறது. இன்னும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். இதில் எதிலுமே கிளாமராக நடிக்கவில்லை.
Post a Comment