நிஜ கேரக்டரில் நடிப்பது சவால்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நிஜ கேரக்டரில் நடிப்பது சவாலானது என்று அஞ்சலி கூறினார். 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தில் லூர்து மேரி என்ற நிஜ கேரக்டரில் நடித்துள்ளார் அஞ்சலி. இதுபற்றி அவர் கூறியதாவது:
ஒவ்வொரு கேரக்டரையும் தேர்ந்தெடுத்துதான் நடிக்கிறேன். 'அங்காடி தெரு'வில் நடிக்கும்போது சேர்மக்கனி கேரக்டர் மிகவும் கவர்ந்தது. அப்படி நிறைய பெண்கள் சென்னையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக வசந்தபாலன் சொன்னார். அதேபோல 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தில் லூர்துமேரி கேரக்டரை இயக்குனர் சொல்லி அந்த கேரக்டர் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக சொன்னார். அவரின் மேனரிசம், பாடி லாங்குவேஜ், பேச்சு இவற்றை இயக்குனரே செய்து காட்டினார். அப்படியே நடித்தேன். என் நடிப்பை பார்த்து விட்டு லூர்துமேரியை நேரில் பார்ப்பது போல இருக்கிறது என்று இயக்குனர் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது. நிஜ கேரக்டரில் நடிப்பது சவாலான விஷயம். காரணம் அவர்கள் நாளை படத்தை பார்க்கலாம் என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.


 

Post a Comment