சென்னை: இந்திய திரையுலகின் ஜாம்பவான்களுள் ஒருவரான மறைந்த நாகிரெட்டியின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறது விஜயா குழுமம். இதனையொட்டி தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து விஜயா குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள பொட்டிபாடு கிராமத்தில் 1912-ம் ஆண்டு பிறந்தவர் நாகிரெட்டி.
பின்னர் சென்னையில் குடியேறிய அவர், விஜயா ஸ்டூடியோவை நிறுவி, விஜயா புரொடக்ஷன் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். `எங்க வீட்டு பிள்ளை', `மாயா பஜார்', `மிஸியம்மா', `நம்நாடு' உள்ளிட்ட படங்களையும், தெலுங்கு, இந்தி மொழி படங்களையும் தயாரித்தார்.
'ஆந்திர ஜோதி' நாளிதழ் மற்றும் `சந்தமாமா' சிறுவர் பத்திரிகையையும் நிறுவி வெற்றிகரமாக நடத்தினார். 1972-ம் ஆண்டு விஜயா மருத்துவ அறக்கட்டளையை ஏற்படுத்தி விஜயா மருத்துவமனை, விஜயா ஹெல்த் சென்டர் மற்றும் விஜயா ஹார்ட் பவுண்டேஷன் ஆகியவற்றை உருவாக்கி மருத்துவ சேவையில் ஈடுபட்டார்.
நூற்றாண்டு விழா
திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட அமைப்புகளிலும் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். திரைப்படத்துறை முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் நாகிரெட்டியின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட விஜயா குழுமம் திட்டமிட்டுள்ளது.
நூற்றாண்டு விழா கொண்டாட்ட விவரங்கள் அடங்கிய இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நாகிரெட்டியின் பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கான விருது வழங்கப்பட உள்ளது.
நூற்றாண்டு விழாவில் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வருகிற 4-ந் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பிப்ரவரி மாதம் நூற்றாண்டு விழா சிறப்பு புத்தகம் வெளியிடப்படுகிறது. நாகிரெட்டியின் சொந்த கிராமத்தில் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
நூற்றாண்டு நினைவு தபால் தலை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான வினாடி-வினா நடத்தப்படுகிறது. பல கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
படங்களுக்கு விருது
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். இதற்கான விழா சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விழா குறித்து அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட பிரஸ்மீட்டில் இயக்குநர் எஸ்பி முத்துராமன், நடிகை சௌகார் ஜானகி, பத அதிபர் பி வெங்கட்ராம ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து விஜயா குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள பொட்டிபாடு கிராமத்தில் 1912-ம் ஆண்டு பிறந்தவர் நாகிரெட்டி.
பின்னர் சென்னையில் குடியேறிய அவர், விஜயா ஸ்டூடியோவை நிறுவி, விஜயா புரொடக்ஷன் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். `எங்க வீட்டு பிள்ளை', `மாயா பஜார்', `மிஸியம்மா', `நம்நாடு' உள்ளிட்ட படங்களையும், தெலுங்கு, இந்தி மொழி படங்களையும் தயாரித்தார்.
'ஆந்திர ஜோதி' நாளிதழ் மற்றும் `சந்தமாமா' சிறுவர் பத்திரிகையையும் நிறுவி வெற்றிகரமாக நடத்தினார். 1972-ம் ஆண்டு விஜயா மருத்துவ அறக்கட்டளையை ஏற்படுத்தி விஜயா மருத்துவமனை, விஜயா ஹெல்த் சென்டர் மற்றும் விஜயா ஹார்ட் பவுண்டேஷன் ஆகியவற்றை உருவாக்கி மருத்துவ சேவையில் ஈடுபட்டார்.
நூற்றாண்டு விழா
திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட அமைப்புகளிலும் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். திரைப்படத்துறை முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் நாகிரெட்டியின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட விஜயா குழுமம் திட்டமிட்டுள்ளது.
நூற்றாண்டு விழா கொண்டாட்ட விவரங்கள் அடங்கிய இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நாகிரெட்டியின் பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கான விருது வழங்கப்பட உள்ளது.
நூற்றாண்டு விழாவில் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வருகிற 4-ந் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பிப்ரவரி மாதம் நூற்றாண்டு விழா சிறப்பு புத்தகம் வெளியிடப்படுகிறது. நாகிரெட்டியின் சொந்த கிராமத்தில் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
நூற்றாண்டு நினைவு தபால் தலை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான வினாடி-வினா நடத்தப்படுகிறது. பல கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
படங்களுக்கு விருது
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். இதற்கான விழா சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விழா குறித்து அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட பிரஸ்மீட்டில் இயக்குநர் எஸ்பி முத்துராமன், நடிகை சௌகார் ஜானகி, பத அதிபர் பி வெங்கட்ராம ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Post a Comment