ராம் கோபால் வர்மா இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா மண்டோதரி வேடத்தில் நடிக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய படம் தயாரிக்கிறார் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா. இந்தப் படத்தை அவரே இயக்குகிறார்.
இந்தப் படத்தில் வரும் மண்டோதரி (ராவணன் மனைவி) பாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் ராம்கோபால் வர்மா பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில்தான் தெலுங்கில் ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சீதையாக நடித்தார் நயன்தாரா. இதனால் மீண்டும் புராணப் படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொள்ளக் கூடும் என்று கூறப்படுகிறது.
அதே நேரம், சமீபத்தில் அவருக்கு தெலுங்கில் வந்த பெரிய வாய்ப்பை மறுத்துவிட்டார். எனவே ராம் கோபால் வர்மாவின் இந்த வாய்ப்பை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரும் ஆண்டில் நயன்தாரா - பிரபு தேவா திருமணம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், நயன்தாரா தொடர்ந்து சினிமாவில் நடிப்பது குறித்து செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.
ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய படம் தயாரிக்கிறார் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா. இந்தப் படத்தை அவரே இயக்குகிறார்.
இந்தப் படத்தில் வரும் மண்டோதரி (ராவணன் மனைவி) பாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் ராம்கோபால் வர்மா பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில்தான் தெலுங்கில் ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சீதையாக நடித்தார் நயன்தாரா. இதனால் மீண்டும் புராணப் படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொள்ளக் கூடும் என்று கூறப்படுகிறது.
அதே நேரம், சமீபத்தில் அவருக்கு தெலுங்கில் வந்த பெரிய வாய்ப்பை மறுத்துவிட்டார். எனவே ராம் கோபால் வர்மாவின் இந்த வாய்ப்பை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரும் ஆண்டில் நயன்தாரா - பிரபு தேவா திருமணம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், நயன்தாரா தொடர்ந்து சினிமாவில் நடிப்பது குறித்து செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment