ஹீரோயின்கள் இடையே சண்டை மூட்டாதீர்கள் : அஞ்சலி கோபம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஜோடியாக நடித்த ஜெய்க்கும் அஞ்சலிக்கும் காதல் என்று வதந்தி பரவியது. இல்லவே இல்லை என்று அஞ்சலி மறுத்தார். இந்நிலையில் 3 ஹீரோயின்கள் படத்தில் அஞ்சலி நடிப்பதால் அதில் அவர் செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார் என்று கிசுகிசு கிளம்பி உள்ளது. இதுபற்றி அஞ்சலி கூறியதாவது: நடிகருடன் காதல் என்று வதந்தி பரப்பி அதற்கு இப்போதுதான் மறுப்பு சொன்னேன். இதற்கிடையில் ஹீரோயின்களுக்குள் சண்டை மூட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்' படத்தில் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதில் முதலிடம் யாருக்கு என்கிறார்கள். முதல், இரண்டாவது என்று ஏன் பிரிக்கிறார்களோ தெரியவில்லை. 3 ஹீரோயின்களுக்கும் சமமான ரோல் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். சோழ வரலாற்று பின்னணியில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக ஆக்ஷன் வேடத்தில் நடிக்கிறேன். குதிரை ஏற்றம், சண்டை காட்சிகளில் நடிக்க பயிற்சி பெற்று வருகிறேன். இம்மாதம் 10ம் தேதி ஷூட்டிங் தொடங்குகிறது. விக்ரமுடன் நடிக்கும் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக உள்ளன. இவ்வாறு அஞ்சலி கூறினார்.


 

Post a Comment