ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்ற, இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து சிம்புவை வைத்து 'வட சென்னை' படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு முன், தன் நண்பன் பிர்த்திவி ராஜ்குமார் இயக்கும் 'நான் ராஜாவாகப் போகிறேன்' படத்திற்கு வசனம் எழுத இருக்கிறார். முன்னதாக, பிர்த்திவி ராஜ்குமார் வெற்றிமாறனின் அசிஸ்டன்ட்டாக பணியாற்றினார். நகுல் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் கதை பிடித்துப் போனதால் படத்திற்கு வசனம் எழுத ஒப்புக்கொண்டாராம் வெற்றிமாறன்.
Post a Comment