சென்னை: தேர்தல் முடிவு வெளியானபோதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், திமுக தோற்கவில்லை, தோற்கடிக்கவும் முடியாது. மக்கள்தான் தோற்று விட்டனர் என்று மீண்டும் கூறியுள்ளார் திமுக நடிகை குஷ்பு.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து அது வெளியானபோது கருத்து கேட்ட செய்தியாளர்களிடம் இது மக்களின் தோல்வி, திமுகவின் தோல்வி அல்ல என்று கூறினார் குஷ்பு. இதையடுத்து அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. மக்கள் தீர்ப்பை குஷ்பு அவமதித்து விட்டதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மீண்டும் அதே போல பேசியுள்ளார் குஷ்பு. சென்னை தி.நகர் பஸ் நிலையத்தில் நேற்று நடந்த திமுக கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பேசுகையில், தலைமைச்செயலகத்தை வாஸ்து பார்த்து ஒதுக்கி வச்சுட்டாங்க. அதனால அங்கே போக மறுக்கிறாங்க.
எதுக்கெடுத்தாலும் மருத்துவமனை கட்டுகிறேன் என்று சொல்கிறாங்க. மருத்துவமனை மீது அவருக்கு திடீருன்னு அப்படி என்ன ஆசை வந்துவிட்டது என்று தெரியவில்லை.
ஆட்சியில் இல்லாதபோதுதான் கொடநாடு போய் ஓய்வு எடுத்தாங்க. ஆட்சியில் இருக்கும்போதும் கொடநாடு போய் ஓய்வு எடுக்கிறாங்க.
மாற்றம் வேண்டும் என்று மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் ஓட்டுப் போட்டாங்க. ஆனா, அவுங்க தலையில பாறாங்கல்லை தூக்கிப்போட்டுட்டாங்க.
ஏன் இந்த கொலைவெறி - இதுதான் தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்துக் கேட்கும் கேள்வி.
திமுக என்றைக்குமே தோற்காது. மக்கள்தான் தோற்று விட்டார்கள். இதைத்தான் நான் வாக்கு எண்ணிக்கை முடிவின்போதே சொன்னேன் என்று கூறினார் குஷ்பு.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து அது வெளியானபோது கருத்து கேட்ட செய்தியாளர்களிடம் இது மக்களின் தோல்வி, திமுகவின் தோல்வி அல்ல என்று கூறினார் குஷ்பு. இதையடுத்து அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. மக்கள் தீர்ப்பை குஷ்பு அவமதித்து விட்டதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மீண்டும் அதே போல பேசியுள்ளார் குஷ்பு. சென்னை தி.நகர் பஸ் நிலையத்தில் நேற்று நடந்த திமுக கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பேசுகையில், தலைமைச்செயலகத்தை வாஸ்து பார்த்து ஒதுக்கி வச்சுட்டாங்க. அதனால அங்கே போக மறுக்கிறாங்க.
எதுக்கெடுத்தாலும் மருத்துவமனை கட்டுகிறேன் என்று சொல்கிறாங்க. மருத்துவமனை மீது அவருக்கு திடீருன்னு அப்படி என்ன ஆசை வந்துவிட்டது என்று தெரியவில்லை.
ஆட்சியில் இல்லாதபோதுதான் கொடநாடு போய் ஓய்வு எடுத்தாங்க. ஆட்சியில் இருக்கும்போதும் கொடநாடு போய் ஓய்வு எடுக்கிறாங்க.
மாற்றம் வேண்டும் என்று மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் ஓட்டுப் போட்டாங்க. ஆனா, அவுங்க தலையில பாறாங்கல்லை தூக்கிப்போட்டுட்டாங்க.
ஏன் இந்த கொலைவெறி - இதுதான் தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்துக் கேட்கும் கேள்வி.
திமுக என்றைக்குமே தோற்காது. மக்கள்தான் தோற்று விட்டார்கள். இதைத்தான் நான் வாக்கு எண்ணிக்கை முடிவின்போதே சொன்னேன் என்று கூறினார் குஷ்பு.
Post a Comment