குடப்புழா முருகன் கோவில் காவடித் திருவிழாவில் பங்கேற்ற நடிகர் கலாபவன் மணி மீது வழக்கு

|


திருவனந்தபுரம்: முருகன் கோவிலில் நடந்த காவடித் திருவிழாவின்போது கலந்து கொண்ட மலையாள நடிகர் கலாபவன் மணி, போலீஸ்காரர் ஒருவரை இடித்துத் தள்ளியதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகர் கலாபவன்மணியின் சொந்த ஊர் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியாகும். அங்குள்ள குடப்புழா முருகன் கோவிலில் காவடி திருவிழா நடந்தது. இதில் நடிகர் கலாபவன்மணியும் கலந்து கொண்டார்.

சாலக்குடி-ஆதிரப்பள்ளி சாலையில் காவடி ஊர்வலம் செல்லும்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் உமேஷ் வாகனங்களுக்கு வழிவிடுமாறு கூறியுள்ளார். இதற்கு விழா குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது நடிகர் கலாபவன்மணி உமேஷை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது போலீசாரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலாபவன் மணி பிரபலமான மலையாள நடிகர் ஆவார். இருப்பினும் ஜெமினி படத்தில் அவர் வில்லனாக நடித்து பெரும் புகழ் பெற்றதைத் தொடர்ந்து தமிழிலும் பிரபலமான வில்லனாக, காமெடியனாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment