களவாணி', 'வாகை சூட வா' போன்ற வெற்றி படங்களை இயக்கிய, இயக்குனர் சற்குணத்துக்கு அடுத்து படம் பெரிய படமாக அமைந்துவிட்டது. சமீபத்தில் பொது நிகழச்சியில் கலந்து கொண்ட நம்ம சீயான் விக்ரம், இயக்குனர் சற்குணத்தின் முந்தைய படங்களை வெகுவாக பாராட்டினாராம். இதனையடுத்து, இயக்குனர் சற்குணமும், விக்ரமும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்த போது, நிறைய கதைகளை விக்ரமிடம், சற்குணம் சொன்னாராம். அதில் ஒரு கதை மிகவும் பிடித்திருப்பதாகவும், விரைவில் நாம் இணைந்து படம் எடுப்போம் என்று சற்குணத்திடம், விக்ரம் கூறியுள்ளாராம்.
Post a Comment