யுரேகா சினிமா ஸ்கூல் நிறுவனம் தயாரிக்கும் படம், 'ஆண் பாம்பும் பெண் தவளையும்'. ஹீரோ இல்லை. ஹீரோயினாக, '6' படத்தில் அறிமுகமாகும் சான்ட்ரா நடிக்கிறார். ஒளிப்பதிவு, மகேஷ்வரன். இசை, சிவ சரவணன். இணை தயாரிப்பு, டி.எஸ்.ரிஷ்வந்த் தெய்வா. எழுதி இயக்கும் யுரேகா கூறும்போது, '''மதுரை சம்பவம்' ரிலீசுக்குப் பிறகு நான் இயக்கும் படம். பாலியல் வன்முறை மற்றும் கல்வி குறித்துச் சொல்லும் கதை என்பதால், திரைக்கதை புதுமையாக இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் வித்தியாசமான கோணத்தில் படமாக்குகிறோம். நானும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன்' என்றார்.
Post a Comment