ஊழல் பற்றிய கதை எழுதி இயக்கி நடிக்கிறார் கமல்ஹாசன். 'விஸ்வரூபம்' படத்தை இயக்கி நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதையடுத்து ஊழல் பற்றிய கதை எழுதி இயக்கி நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் ஒரு கதை எழுதினேன். அதை படமாக உருவாக்க அறிவுஜீவித்தனமும், அதிக பணமும் தேவைப்பட்டது. அப்போது அதற்கு நான் தயாராக இல்லை. இப்போது இரண்டும் பொருந்தி வந்திருக்கிறது. இதையடுத்து இக்கதையை இயக்கி நடிக்க தீர்மானித்திருக்கிறேன். இந்தி, தமிழில் ஒரே நேரத்தில் இப்படம் வெளிவருகிறது. இந்தி படத்துக்கு 'அமர் ஹைன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு ஏன் வரவில்லை என்று கேட்கிறார்கள். அதில் எனக்கு விருப்பமில்லை. அதில் நிறைய பணம் விளையாடுகிறது. சாதாரண மனிதன்கூட அரசியல் என்றால் பணம் சம்பாதிக்கும் தொழில் என்றுதான் பார்க்கிறான். இப்படத்தில் அதை பற்றியும் அதற்கு தீர்வு என்ன என்பதையும் கூற உள்ளேன்.
Post a Comment