சென்னை: தரமான தமிழ்ப் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க, 22 பேர் கொண்ட கமிட்டியை நியமித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அபிராமி ராமநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், “உலக அளவில் தமிழ் திரைப்படங்கள் மிகவும் உயர்ந்திருக்க வேண்டும் என்று மிக உயர்ந்த நோக்கத்துடன், தரமான தமிழ் படங்களை ஊக்குவிப்பதற்காக, ‘யு’ சான்றிதழ் பெற்ற தரமான தமிழ் படங்களுக்கு முழு கேளிக்கை வரி விலக்கு தமிழக அரசு அளித்திருக்கிறது.
இந்த படங்களை பார்வையிட்டு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்கு அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாராத 22 நபர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட குழு ஒன்று நியமித்ததற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி,” என்று கூறியுள்ளார்.
Post a Comment