தர்மேந்திரா, ஷபனா ஆஸ்மிக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கமல்ஹாசன் கூறியதாவது: பத்ம விருது பெற்றவர்களில் சிலர் என்னைவிட மூத்தவர்கள். அவர்கள் எல்லோரும் நான் நேசிப்பவர்கள். மற்றவர்கள் எனது நண்பர்கள். அவர்களை பற்றி நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. எனது அன்புக்குரியவர்களில் தர்மேந்திராவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அவர் உள்பட விருது பெறும் சினிமா நண்பர்கள் அனைவருமே தங்களது தொழிலை மிக நேர்த்தியாக செய்தவர்கள். அதை ஏற்கும் விதமாக அரசு அவர்களுக்கு விருதுகள் அறிவித்திருப்பது சந்தோஷம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
Post a Comment