கிளாமராக நடித்தால் வாய்ப்பு கிடைக்கிறது என்று ஷார்மிளா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 'கிழக்கே வரும் பாட்டு' படத்தில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தேன். பிறகு திருமணம், குழந்தை என்று சினிமாவை விட்டு விலகி இருந்தேன். இப்போது குணசித்திர வேடங்களில் நடிக்கிறேன். 'ஒரு மழை நான்கு சாரல்', 'காதலித்துபார்', 'காதலுக்குள் காதல்' உட்பட பல படங்களில் நடித்து வருகிறேன். 'மகான் கணக்கு' படத்தில் என் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். பெரும்பாலான இயக்குனர்கள் கிளாமரைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவற்றைத் தவிர்த்து, சிறந்த கேரக்டர்களில் நடித்து வருகிறேன்.
Post a Comment