தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோ கிராபர்கள் இணைந்து பி அண்ட் வி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி, 'முயல்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். முரளி, சரண்யா நாக் நடிக்கிறார்கள். ஜே.வி இசை. எம்.ஆர்.சரவணகுமார் ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் எஸ்.பி.எஸ்.குகன் கூறியதாவது: சுமார் 5 ஆயிரம் பேர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள். இந்தியாவிலேயே இது முதல் முயற்சியாகும். வாழ்க்கையில் எந்த துன்பத்தையும் சந்திக்காத மூன்று இளைஞர்கள் திடீரென்று ஒரு கொடூரத்தை சந்திக்க நேரிடுகிறது. அதனால் பாதிக்கப்படும் அவர்கள், இனி அந்த கொடூரம் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காக என்ன செய்கிறார்கள் என்பது கதை. 'முயன்றால் முடியாதது எதுவும் இல்லை' என்பதுதான் படத்தின் கரு. 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி' என்ற படத்தை ஸ்டில் கேமராவிலேயே படமாக்கினேன். இந்தப் படத்தையும் அதுபோலவே உருவாக்குகிறேன். டெக்னீஷியன்கள் தயாரிக்கும் படம் என்பதால் டெக்னிக்கலாக பல விஷயங்கள் இருக்கும். மெசேஜும் இருக்கும்.
Post a Comment