‘வட சென்னையை வன்முறையாக சித்தரிக்கிறது சினிமா’

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திருமுருகன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள படம் 'அட்டகத்தி'. தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா, ஷாலி நடிக்கிறார்கள். பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை. இதன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட, வெங்கட்பிரபு பெற்றார். விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசும்போது, ''வட சென்னை என்றாலே வன்முறைதான் ஞாபகத்துக்கு வருகிறது. தாதாக்கள், ரவுடியிசம் என்று சினிமா காட்டியிருக்கிறது. அதற்கு நானும் ஒரு காரணம். ஆனால், வட சென்னை என்பது பல கிராமங்கள் சேர்ந்த தொகுப்பு. அதை இந்தப் படம் பதிவு செய்திருக்கும் என்று நம்புகிறேன்'' என்றார். விழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் எல்.தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு, தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத் துணை பொது மேலாளர் ராமகிருஷ்ணன், இயக்குனர்கள் ராஜேஷ், சசி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சி.வி.குமார் வரவேற்றார். முடிவில், பா.ரஞ்சித் நன்றி கூறினார்.


 

Post a Comment