ஜேசுதாஸுக்கு ஸ்ரீ நாராயண விருது: நாளை விருது வழங்கும் விழா

|


திருச்சூர்: 2011ம் ஆண்டுக்கான ஸ்ரீ நாராயண விருதுக்கு பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் சினிமா பாடல்கள் பாடியுள்ளார். மயக்கும் குரல் வளம் கொண்ட அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஜேசுதாஸின் திறமையை பாராட்டி 2011ம் ஆண்டுக்கான ஸ்ரீ நாராயண விருது அவருக்கு வழங்கப்படவிருக்கிறது. கேரள மாநிலம் திருச்சூரில் நாளை (ஜனவரி 7) நடக்க உள்ள விழாவில் சிவகிரை மடாதிபதி பிரகாசானந்த சுவாமிகள் விருதையும், ரூ.50,000 பரிசுத் தொகையும் ஜேசுதாசுக்கு வழங்குகிறார். விருது வழங்கும் விழாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் எம். ராமச்சந்திரன் துவக்கி வைக்க உள்ளார்.

 

Post a Comment