அமலாவை கட்டிப்பிடிக்க பயந்தார் அதர்வா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தில் அமலாவை கட்டிப்பிடிக்கப் பயந்தேன் என்று அதர்வா கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இது கவித்துவமான படம். வித்தியாசமான கதை. இன்றைய மாடர்ன் வாழ்க்கைப் பற்றிய கதை. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் ஹீரோயின் அமலா பாலும் நானும் நண்பர்களாகி விட்டோம். காதல் காட்சியில் அவருக்கும், எனக்குமான கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருக்கும். என்றாலும், முதல்முறையாக அவரைக் கட்டிப்பிடித்தபோது நடுக்கமாக இருந்தது. பிறகு இயக்குனர் தைரியம் சொன்னதும் பதட்டமின்றி நடித்தேன். படம் முடிந்துவிட்டது. அடுத்து பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறேன்.


 

Post a Comment