'பொம்மலாட்டம்' படத்தில் அறிமுகமானவர் ருக்மணி விஜயகுமார். பிறகு 'ஆனந்த தாண்டவம்' படத்தில் நடித்தார். பின்னர் படங்களில் நடிக்காமல் நடனத்தில் கவனம் செலுத்தினார். இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 'பொம்மலாட்டம்' நான் மிகவும் எதிர்பார்த்த படம். அதில் எனது வித்தியாசமான நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் அதிக வாய்ப்புகள் வரவில்லை. அதனால் நடனத்தின் பக்கம் கவனம் செலுத்தினேன். உலகம் முழுவதும் சென்று நடன நிகழ்ச்சிகள் நடத்தினேன். இப்போது நடிப்பின் மீது ஆர்வம் வந்திருக்கிறது. கதை கேட்க ஆரம்பித்திருக்கிறேன். இந்த ஆண்டு தெலுங்கில் ஒரு படமும், தமிழில் ஒரு படமும் நடிக்கிறேன். இனி நடிப்பு, நடனம் இரண்டிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன்.
Post a Comment