'கோச்சடையான்' படத்தில் ரஜினியுடன் நடிக்காததற்கு எனது கால்ஷீட் பிரச்னைதான் காரணம் என்று இந்தி நடிகை கேத்ரினா கைப் கூறினார். 'கோச்சடையான்' படத்தின் கேத்ரினா கைஃப் ஹீரோயினாக நடிப்பார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தீபிகா படுகோன் ஹீரோயினாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரஜினியுடன் நடிக்காதது ஏன் என்று கேட்டபோது கேத்ரினா கூறியதாவது: சல்மான்கானுடன் 'ஏக் தா டைகர்', ஷாரூக்கானுடன் பெயரிடப்படாத படங்களில் நடித்துவருகிறேன். இந்நிலையில் ரஜினி மகள் சவுந்தர்யா 'கோச்சடையானி'ல் நடிக்க என்னிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஷாரூக் பட ஷூட்டிங்கும் லண்டனில்தான் நடக்க இருக்கிறது என்பதால் கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்யலாம் என நினைத்தேன். 20 நாட்கள் போதும் என்றார் சவுந்தர்யா. ஆனால், அவர் கேட்ட தேதியை ஒதுக்க முடியவில்லை. ரஜினியுடன் நடிக்காதது வருத்தமாகத்தான் இருக்கிறது. இவ்வாறு கேத்ரினா கூறினார்.
Post a Comment