'கொலவெறி' என்ற பாடல் உலகத்தையே அசத்தியது. இதனையடுத்து '3' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கு காரணம், பிரதமரையே விருந்துக்கு அழைக்க வைத்த பாட்டு இடம்பெறும் படம் என்தபால். அதுமட்டுமின்றி '3' படத்தின் ரிலீஸ் தேதிக்காக சில படங்கள் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், கொலவெறி பாடலால் படத்திற்கு எதிர்பார்ப்பு இருப்பதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இதனால் மற்ற பட தயாரிப்பாளர்கள் சிலர், '3' படத்திற்காக, தங்கள் பட ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கின்றனர் என்று கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது.
Post a Comment