சென்னை: சினிமாவுக்கு மத்திய அரசு சேவை வரி விதிப்பதை எதிர்த்து தமிழ் சினிமா அமைப்புகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.
அரசு தரப்பில் கட்டணம், வரி என எதை அறிவித்தாலும் சினிமாக்காரர்கள் அதிலிருந்து தப்பிப்பது என்றே பார்க்கின்றனர். சலுகை என்றால் முதலில் ஓடி வருகின்றனர். கேட்டால் நாங்கள் கலைஞர்கள் என்பார்கள். ஆனால் நிஜத்திலும் ஒரு கலைஞனுக்குரிய தன்மையோடு ஒதுங்கியிருப்பதில்லை. அடுத்த முதல்வர் நான்தானாக்கும்... ஆட்சியமைக்கவே நான்தான் உதவினேன் என்றெல்லாம் வீராவேசப் பேச்சுக்கு மட்டும் குறைவிருக்காது.
திரைப்படங்களுக்கு சேவை வரியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வழக்கம் போல சினிமாக்காரர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் திரைப்பட சங்கங்கள் இந்த சேவை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. நேரில் மனுக்களும் அளிக்கப்பட்டன.
அடுத்த கட்டமாக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. வருகிற 23-ந்தேதி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இந்திய சினிமா பெடரேஷன் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ் திரையுலகமும் பங்கேற்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.
அரசு தரப்பில் கட்டணம், வரி என எதை அறிவித்தாலும் சினிமாக்காரர்கள் அதிலிருந்து தப்பிப்பது என்றே பார்க்கின்றனர். சலுகை என்றால் முதலில் ஓடி வருகின்றனர். கேட்டால் நாங்கள் கலைஞர்கள் என்பார்கள். ஆனால் நிஜத்திலும் ஒரு கலைஞனுக்குரிய தன்மையோடு ஒதுங்கியிருப்பதில்லை. அடுத்த முதல்வர் நான்தானாக்கும்... ஆட்சியமைக்கவே நான்தான் உதவினேன் என்றெல்லாம் வீராவேசப் பேச்சுக்கு மட்டும் குறைவிருக்காது.
திரைப்படங்களுக்கு சேவை வரியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வழக்கம் போல சினிமாக்காரர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் திரைப்பட சங்கங்கள் இந்த சேவை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. நேரில் மனுக்களும் அளிக்கப்பட்டன.
அடுத்த கட்டமாக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. வருகிற 23-ந்தேதி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இந்திய சினிமா பெடரேஷன் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ் திரையுலகமும் பங்கேற்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.
Post a Comment