'விளையாட வா' படத்தில் வில்லனாக நடித்துள்ள பரத்ராஜ், நிருபர்களிடம் கூறியதாவது: மும்பையில் பிறந்து, வளர்ந்தேன். முறைப்படி நடிப்புப் பயிற்சி பெற்றேன். மேடை நாடகங்களில் நடித்தேன். 5 ஆயிரத்துக்கும் அதிகமான விளம்பரப் படங்களுக்கு குரல் கொடுத்ததுடன், பாடல்களையும் பாடியிருக்கிறேன். தமிழில் நடிக்க முயற்சித்தபோது, 'விளையாட வா' இயக்குனர் விஜயநந்தா, வில்லன் வாய்ப்பு கொடுத்தார். சிலர், ஏன் ஹீரோவாக நடிக்கக்கூடாது என்கின்றனர். அதில் விருப்பம் இல்லை. கதையின் திருப்புமுனைக்கு காரணமாக அமையும் எந்த கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன்.
Post a Comment