'மறுமுகம்' படத்தில் ஹீரோவாக நடித்து வரும் அனூப் குமார் கூறியதாவது: 'வட்டாரம்', 'சிக்கு புக்கு' படங்களில் ஆர்யாவுடனும், 'கத்திக்கப்பல்' படத்தில் ஹீரோவாகவும் நடித்தேன். இப்போது 'மறுமுகம்' படத்தில், மென்மையான ஹீரோவாக நடிக்கிறேன். ரன்யா ஜோடி. டேனியல் பாலாஜியும் இருக்கிறார். கொடைக்கானல் மலையில் உயரமான குன்றில் நின்று, பாடல் காட்சியில் நடித்தேன். பலத்த காற்றால் தடுமாறினேன். கீழே பார்த்தபோது, மரண பள்ளம் பயமுறுத்தியது. அந்த இடத்தில் நடிக்க மாட்டேன் என்றேன். இயக்குனர் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் கொடுத்த தைரியத்தில், நடித்தேன். இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது.
Post a Comment