சற்குணம் இயக்கும் படத்தில் பிரபு மகன் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். 'களவாணி', 'வாகை சூட வா' படங்களை அடுத்து சற்குணம் இயக்கும் படத்துக்கு, 'கோவத்தை அள்ளி கொஞ்சுகிறேன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார். இதில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்ற நடிகர், நடிகை தேர்வு நடந்து வருகிறது. இந்தப் படத்தை அடுத்து தமிழ், தெலுங்கில் சற்குணம் இயக்கும் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதற்கு 'நேர்-நில்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
Post a Comment