'பாலைவனச்சோலை' ரீமேக்கில் நடித்த நிதின் சத்யா, ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பொருத்தமான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வருடம் காத்திருந்தேன். எஸ்.டி.வேந்தன் சொன்ன 'மயங்கினேன் தயங்கினேன்' கதை பிடித்தது. ஒப்புக்கொண்டேன். இதில் கால்டாக்சி டிரைவர் வேடத்தில் நடிக்கிறேன். திஷா பாண்டே ஜோடி. திரைக்கதை, காட்சி அமைப்புகள் எல்லாம் புதுமையாக இருக்கும். அடுத்து '143' படத்தில் ஷோபா ஜோடியாக நடிக்கிறேன். இந்த இரு படங்களும் எனக்கு திருப்புமுனையாக அமையும். ஆக்ஷன், காதல் என வெவ்வேறு தளங்களில் நடிப்பைத் தொடர்கிறேன்.
Post a Comment