ஹோம்லி, கிளாமர் இரண்டிலும் சிறப்பாக நடிக்க ஆசைப்படுவதாக சஞ்சனா சிங் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: 'ரேணிகுண்டா' படத்தில் அழுத்தமான கேரக்டர் கிடைத்தது. அதற்கு பிறகு அப்படிப்பட்ட கேரக்டர்கள் கிடைக்கவில்லை. நண்பர்களுக்காக, 'மறுபடியும் ஒரு காதல்', 'மயங்கினேன் தயங்கினேன்', 'வெயிலோடு விளையாடு' படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளேன். கணேசன் காமராஜ் இயக்கும் 'யாருக்குத் தெரியும்' படத்தில் ஹீரோயினாக, அதிர்ந்து பயந்து பயப்படவைக்கிற நடிப்பைக் கொட்டியிருக்கேன். அடுத்து அதியமான் இயக்கும் 'தப்புத் தாளங்கள்' படத்தில் கிளாமர் ஹீரோயின். சி.எஸ். அமுதன் இயக்கும் 'இரண்டாவது படம்' படத்திலும் நடிக்கிறேன். ஹோம்லி, கிளாமர் இரண்டிலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஷோ கேஸ் மாதிரி இருப்பதில் உடன்பாடு இல்லை.
Post a Comment