தமிழில் நடிப்பதற்காக கன்னட படத்தில் இருந்து வெளியேறிய ஹீரோயின்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் படத்தில் நடிப்பதற்காக கன்னட படத்தில் இருந்து வெளியேறினார் ஹீரோயின். பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி சுபா புட்லா. தென்னிந்திய அழகி போட்டியில் வென்றவர். கன்னட பட இயக்குனர் ரவிவர்மா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். பின்னர் திடீரென்று அப்படத்தில் இருந்து விலகி தமிழ் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார். இதுபற்றி ரவிவர்மா கூறுகையில், ''என் படத்தில் சுபா நடிக்க இருந்தது. சில நாட்களுக்கு முன்பே இது முடிவானது. ஆனால், அவர் நடிப்பதில் அவரது அப்பாவுக்கு விருப்பம் இல்லையாம். நடிக்க கூடாது என்று அவர் சொல்லிவிட்டதால் சுபா அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அம்மாவிடம் பேசியும் அனுமதி கிடைக்கவில்லை. யாரையும் கட்டாயப்படுத்தி நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை'' என்றார். கன்னடத்தில் நடிக்காமல் விலகிய சுபா தமிழில் 'மாலை பொழுதின் மயக்கத்திலே' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் படத்தில் நடிப்பதால்தான் கன்னட படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, 'ஏற்கனவே தமிழ் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்ததால் கன்னட படத்தில் நடிக்க முடியவில்லை. புதுமுகமாக நடிக்கலாம் என்று இருந்தேன். கால்ஷீட் பிரச்னையால்தான் நடிக்க முடியவில்லை. பட குழுவுடன் பேசிதான் இந்த முடிவை எடுத்தேன். தமிழ் பட ஷூட்டிங் விரைவில் முடிகிறது. நல்ல வாய்ப்பு வந்தால் கன்னட படங்களில் நடிப்பேன்' என்றார்.


 

Post a Comment