ரசிகர்கள் அதிகரிப்பு : அமலா பால் மகிழ்ச்சி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரே நேரத்தில் இரு படங்கள் ரிலீசானதில் மகிழ்ச்சி என்று அமலா பால் சொன்னார். மேலும் அவர் கூறியதாவது: நான் நடித்த 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'காதலில் சொதப்புவது எப்படி?' படங்கள் ஒரே நாளில் ரிலீசாகியுள்ளன. இரண்டிலும் எனது நடிப்பை பாராட்டுகிறார்கள். வரும் கேரக்டர்கள் கனமானதாகவும் காதல் கதைகளாகவும் இருப்பது எனக்குக் கிடைத்த பிளஸ் பாயின்ட். இப்போது எனக்கு ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள். 'மைனா'வுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் உயரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. என்றாலும், கதைக்குள் என்னை கேரக்டராகப் பொருத்திப் பார்க்கவே விரும்புகிறேன். தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்.


 

Post a Comment