தமிழில், 'எல்லாம் அவன் செயல்' படத்தில் நடித்தவர் மலையாள நடிகை பாமா. இப்போது 'சேவற்கொடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் 'மஞ்சுவாடு' என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடித்த ராஜீவை பாமா காதலித்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் இந்த காதலுக்கு பாமாவின் பெற்றோர் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி பாமாவிடம் கேட்டபோது, "எந்த நடிகரோடும் என்னை இணைத்து இதுவரை செய்தி வந்ததில்லை. இப்போது வந்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய படங்களில் பிசியாக நடித்துவருகிறேன். இதில் நான் எங்குபோய் காதலிப்பது? அதனால் இது வதந்திதான்" என்றார்.
Post a Comment