லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படத்தில், ஆர்யா ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தை 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்குவதாக இருந்தது. இப்போது ஆர்யாவுக்குப் பதில் தெலுங்கு ஹீரோ ராம் நடிக்கிறார். சரவணனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் ஆர்யா விலகியதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி ஆர்யாவிடம் கேட்டபோது, 'லிங்குசாமியுடனும், சரவணனுடனும் நட்பு தொடர்கிறது. கதைக்கும், கேரக்டருக்கும் பொருத்தமாக இருக்க மாட்டேன் என்று சரவணன் நினைத்து இருக்கலாம். அதனால், அதில் நடிக்கவில்லை. இப்போது செல்வராகவன் இயக்கத்தில், 'இரண்டாம் உலகம்' படத்தில் நடித்து வருகிறேன்' என்றார்.
Post a Comment