பிரபுதேவா, நயன்தாராவை சமாதானம் செய்யவில்லை : குஷ்பு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரபுதேவா, நயன்தாராவை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடவில்லை என்றார் குஷ்பு. காதல் ஜோடிகளாக வலம் வந்த பிரபு தேவா, நயன்தாரா சமீபத்தில் பிரிந்தனர். இதையடுத்து நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்நிலை யில் பிரபுதேவா, நயன்தாராவுக்கு இடையே சமரசம் ஏற்படுத்த குஷ்பு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து குஷ்பு கூறியதாவது:

பிரபுதேவா, நயன்தாரா இருவரும் எனது நல்ல நண்பர்கள். பிரபு தேவாவை அவர் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே எனக்கு தெரியும். அவர் என்னுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். பிரபுதேவா, நயன்தாராவுக்கு இடையில் நான் மீடியேட்டராக இருக¢கவில்லை. காதலர்களாக இருந்த அவர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக அறிந்தேன். அவ்வளவுதான். மற்றபடி அந்த பிரச்னை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்களுக்குள் என்ன நடந்தாலும் அது அவர்களின் சொந்த பிரச்னை. அதில் நான் தலையிட விரும்பவில்லை. இதற்கிடையே நான் தலையிட்டு அவர்களை சமரசம் செய்து வைக்க முயல்வதாக சிலர் புரளி கிளப்புகிறார்கள். இதில் சிறிதும் உண்மையில்லை.


 

Post a Comment